முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசூர் வம்சம்

ஜெயமோகன் 2கோடி தமிழர்கள் தமிழகத்துக்கு வெளியே வாழ்வதாக ஒரு கணக்கைச் சொல்கிறார்.இத்தனை பேரும் அடுத்த தலைமுறை
அதற்கடுத்த தலைமுறை என்று அவரவர் சமூகம் சார்த்த அறக்கோட்பாடுகளையும் வழக்கங்களையும் மொழியையும் சேர்த்துக்கொண்டும் சிதைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படி ஒரு தலைமுறை, கடைக்கு போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் போது அமர்ந்திருக்கும் விருந்தாளியைப்போல்,சடக்கென உங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டதைப் போன்றதொரு உணர்வு வருகிறது அரசூர் வம்சத்தை படிக்கும்போது. பனியன் சகோதரர்கள் வருகிறார்கள், வயசன் பறக்கிறார், முடிந்துகொண்டு நலங்குப்பாடல்களை மூத்தகுடிப்பெண்டுகள் பாடுகிறார்கள் நட்ட நடுவே ஒன்றும் புரியாமல் நீங்களும் அமர்ந்திருக்கிறீர்கள்.



மாய எதார்த்த நாவல்கள்(magical realism) வகை நாவல்கள் காலக்கயிற்றில் மாட்டிக்கொண்ட காத்தாடிப்பட்டம் போல் இல்லை இல்லை.. ஊடுநூலும் பாவு நூலும் போல.. வேண்டாம் ஒரு Pendulum போல உங்களை முன்னும் பின்னும் இன்னும் கொஞ்சம் முன்னும் என்று மாற்றி மாற்றி கொஞ்சம் தலைசுற்ற வைக்கிற கதைசொல்லும் வடிவம்.
காபரியேல் மார்க்யூசு சொல்வது போல் கொஞ்சம் அசந்தால் விவரணைகளிலிலேயே சிக்கி மூச்சுத்திணரும். கொஞ்சம் வெளியே வந்து பார்த்தால் வண்ணங்கள் புலப்படும்.கலைடாஸ்கோப்புக்குள்ளிருந்து கலைடாஸ்கோப்பை பார்ப்பது போலத்தான் மாய எதார்த்த நாவல்களும்.எங்கிருக்கிறோம் என்று புரியாவிட்டால் ரசிக்காது.எரிச்சல்
வரலாம்.

அதை எழுத்தில் கொண்டுவருவதற்கான மொழியாளுமை சாதரணமானது கிடையாது. அதுவும் கதையை அதே போக்கில் திகட்டாமல் கொண்டு செல்வது எழுதாளர்களுக்கு ஒரு சவால்தான். ஒவ்வொரு எழுத்தாளுரும் ஒருமுறையாவது அந்த முயற்சியில் எட்டிப்பார்த்து இருப்பார்கள்.அந்த சாதுரியமும் மொழியாளுமையும் இரா முருகனுக்கு அதிகமாகவே இருக்கிறது. பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் என்றால் அது சிறுமைப்படுத்துவதாகிவிடும்.

அழிந்துபோகும் அரண்மணையையும், மெதுவாய் மாறும் அரசூரையும், புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணர்களையும், புகையிலை வாசனையையும், பழுக்காத்தட்டு சங்கீதத்தையும் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் இராமு. கப்பலிலும், வீட்டிலும், ஊஞ்சலிலும், அழுக்கேறிய மாடிகளிலும்,அரங்குகளிலும் வரைமுறையின்றி அழுக்கும்,
வியர்வையும், முடைநாற்றுமுகாக எல்லாவகையான காமக்களியாட்டாங்களும் காட்சிப்படுத்தப் படுகிறது. விரசமாய், ஆபாசமாய், அறுவாறுப்பாய் இளிவரலோடு கருதப்படும் பலதும் மறைபொருளின்றி விவரிக்கப்படுகிறது. எல்லாக் காலங்களிலிருந்தும், எல்லாப்பக்கங்களிலிருந்தும், எல்லா வகையான மனிதர்கள், போனஜென்மத்து மனிதர்கள் என்று வகை வகையாக மனிதர்கள் வந்துபோய்க்கொண்டே இருக்கிறார்கள்.ஆச்சரியமளிக்கும் பல மனிதர்கள்(கிறித்தவ பிராமண உட்பிரிவில் ஒருவர்.வரலாறு அறிய ஆவல்)வருகிறார்கள்.

அரசூரில் வசிக்கும் ஒரு பிராமணக்குடும்பம் எப்படி காலவோட்டத்தில் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தொடர்புடைய பல்வேறு மனிதர்களுடன் கதை நகர்கிறது அவ்வளவுதான். ஒருகட்டத்தில் கதையோட்டத்தில் தொய்வு ஏற்படுகிறது.

தொய்வுக்கு காரணம் மறுபடி மறுபடி ஒரேமாதிரி மனிதர்களின் குணநலன்கள் மற்றும் காட்சிப்படுத்துதல். ஏனென்று யோசிப்பதில் புதிதாய் தோன்றும் மனிதர்களும் மனிதர்களாகவே இருப்பதும் ஒரு காரணம். அதாவது மனிதர்களுக்கான அடிப்படை குணங்கள் எந்த நூற்றாண்டானாலும்,இடமானாலும்,இனமானாலும் மாறுவதில்லை என்ற குறிப்பதாலும் இருக்கலாம். இது திட்டமிட்டு புனையப்பட்டதா அல்லது என் மேம்போக்கான வாசிப்பு எதிர்பார்ப்பினாலும் இருக்கலாம்.

இராமுருகனின் மொழிநடையில் ஏற்பட்ட தொய்வா என்பது மறுவாசிப்பில், மறுவாசிப்பு என்பதை திரும்பப் படிப்பது என்றே கொள்ளுகிறேன் இங்கே, புரியலாம் அல்லது புரியாமலே போகலாம். இப்போதைக்கு, சுலபமாக, மொழிநடையில் தேக்கம் என்றே பதிவுசெய்கிறேன்.

நான்காண்டுகளுக்கு முன் படித்த காப்ரியேல் மார்க்யூசின் Love in the time of Cholera படித்தபோது பக்கங்களை நகர்த்தித் தள்ள வேண்டி இருந்த்து. பெரும் ஆயாசத்துடம் படித்து முடித்தேன்.

உணவிலும், புத்தகத்திலும் எடுத்ததை முடிக்காமல் இருப்பின், எவ்வளவு மோசமாக இருந்தாலும், கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்குவது என் கிறுக்குத்தனங்களில் ஒன்று. முழுமுதல் காரணம் புரியாத இடங்களும்,பார்க்காத வழக்கங்களும்.இரண்டாவது காரணம் நிறைய புதினங்கள் மற்றும் காத்திரமான புத்தகங்களை வாசிக்காத அனுபவமின்மை. அதனாலேயே பெரும் ஆயாசமாய் உணர்ந்தேன். முதல் பிரச்சனை அரசூர் வம்சம் வாசிக்கும்
சிலருக்கு வரலாம். குறைந்தது மலையாளமொழியுடனான என் மிகச்சிறிய பரிச்சயத்தால் (என் உறவினர் பலர் இன்றும் தென்கேரளத்தில் வாழ்கிறார்கள்), சில குழப்பத்தமிழர்களுடுனான
நட்பால் அரசூர் வம்சத்தின் தமிழ்சொற்களிலிலும் அவர்கள் பயன்படுத்தும் சொல்லாடல்களைய பெரிதும் உணரமுடிந்தது.மிகவும் ரசித்தது 'வார்த்தைச்சொல்றது'('பேசுவது') போன்ற வழக்கு மொழிகள். மேலும் என்னால் இராமுருகனின் ஆழமான ஆராய்ச்சியை புரிந்துணர்ந்து ரசிக்கவைக்கிறது. உழைப்பைப்பார்த்து பிரமிக்கவைக்கிறது.

தீவரதமிழ் வாசகனாக(முகத்த உர்ர்னு வச்சுக்கறவங்களா??) விரும்புவோர் ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய புதினம். இப்படி எல்லாம் சொல்ற அளவுக்கு நான் பெரிய வாசிப்பாளி
இல்லை அதனால.. டிவிட்டரில் போட்ட அதே ஒருவரி விமர்சனத்தை போடுகிறேன். 75% அட்டகாசம் அரசூர் வம்சம்.

என் ego engineஐ பத்தவைத்து, இந்தப்பதிவை அல்லது புத்தகவிமர்சனத்தை எழுதவைத்த யாத்ரீகனுக்கு நன்றிகள்.

கருத்துகள்

www.bogy.in இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
hayyram இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு. நன்றி

regards
ram.

www.hayyram.blogspot.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக