முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜெயாக்கா!!

ஊருக்கே அவர் ஜெயாக்கா தான்.4;30 க்கு எழுந்து டாக்டர் வீட்டுக்கு சொஸைட்டியில் பால் வாங்கி வருவதிலிருந்து பதிணொண்ணோ பன்னிரண்டோ அடிக்கும் வரை வாரம் ஏழு நாட்களும் ஊரெல்லாம் கால்கள் ஓடிக்கொண்டிருக்கும். நாலே நாலு மிக நீண்டதெருக்களுள்ள ஊரில் அவர் வேலை செய்யாத வீடு என்று எதுவும் கிடையாது. தாலுகாபீஸ் அம்மாவுக்கு வீட்டிலேயே பிரசவத்தின் போது செவிலி வேலை முதல் குழந்தைவளர்ப்பு வேலை. கடைக்காரர் வீட்டில் தினசரி வீட்டு வேலை. மைத்துனரின் ஓட்டலில் பாத்திரம் தேய்க்கும் வேலை இதைத்தவிர ஒரு அலுவலகத்தை பெருக்கும் வேலை இதைத்தவிர அவ்வப்போது அழைக்கும் வேலைகள் என்று வேலை ஓடிக்கொண்டிருக்கும். பொதுவில் ஊர் அவரிடம் மிகவும் அன்பாகவே நடந்துகொண்டது. அல்லது இளம்பருவத்தில அவ்வாறே எனக்குப்பட்டது. தேவையென்றால் கடன் வாங்கிச்செல்வார் வேறு ஒருவரிடம் கடன் பெற்றோ உழைப்புக்கு முனபணமோ பெற்று அந்தக் கடனை சில வாரங்களில் அடைப்பார். உழைப்பு மட்டுமே மூலதனம். ஒரே கனவு, குறிக்கோள் வகைக்கு இரண்டான தன் நான்கு குழந்தைகளையும் படிக்க வைக்கவேண்டும் என்பதே. பெரியவனுக்கு பத்து வயதிருக்கும். கடைசி பெண்ணுக்கு மூன்று நான்கு வயதிருக்கும்.கணவர் பெ