முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிடித்த இணையப்பக்கத்தை சேமித்து வைப்பது எப்படி?

மூன்றே படிகள் தான். 1. இங்கு போய் ஒரு பயனர்கணக்கை உருவாக்குங்கள். 2. அங்கு உங்கள் இணைய உலாவி( IE, Firefox ) எதுவோ அதுக்கு ஏற்றார்போல் பொத்தானை உங்கள் உலாவியில் இணைத்துக்கொள்ள நீட்சி( extension) கொடுப்பார்கள் அதை நிறுவிக்கொள்ளுங்கள்.உங்கள் உலாவியில் buttonகளும் menuவும் வந்துவிடும் step -2 ஐ நீங்கள் உபயோகப்படுத்தும் அனைத்து கணினிகளிலிலும் செய்துவிடுங்கள். ஆச்சா, அடுத்து 3. எப்படி உபயோகிப்பது... இப்போ ஒரு பிடித்த பக்கத்தை படிக்கிறீர்கள். படித்தவுடன், இந்த tag பொத்தானை ஒரு அமுக்... அடுத்து இப்படி ஒரு சின்ன சன்னல் வரும். அதில் நீங்கள் உங்களுக்கு ஏற்றமாதிரி tag போட்டு வைத்துக்கொள்ளலாம். இதில் நான் do not shareஐ check பண்ணி அடுத்தவர் நான் என்ன சேமித்திருக்கிறேன் என்று பார்க்காமல் இருக்க வழி பண்ணி இருக்கிறேன். உங்கள் நண்பர்களோடு பார்த்து பகிர default ஆக விட்டுவிட்டால் அடுத்தவர்களும் உங்களுடையதை பார்த்துக்கொள்ளலாம். என்ன பயன் 1. tagகள் மக்கள் எதை படிக்கிறார்கள் என்று trend analysis பண்ண உதவும் 2. உங்களுக்கேற்ற வகையில் வகைப்படுத்தி வைத்துகொள்ள. 3. நண்பர்களுடன் பகிர உங்களுக்குள்ளே குழுவாக பகிர

தமிழில் தளமுகவரி!! கனவு மெய்ப்படட்டும்!!

கோபி(பெயர் குழப்பத்திற்கு மன்னிக்கவும், விவரம் பின்னூட்டத்தில்) இந்த பின்னூட்டத்தை ஆங்காங்கு சில இடங்களில் போட்டிருந்தார். Please take part in testing Tamil Domain http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/ http://உதாரணம்.பரிட்சை/தமிழ் மிக்க மகழிச்சியாய் இருந்தது.சோதனை அனைத்தும் வேலை செய்கிறது.சரியான பக்கத்துக்கு எடுத்து செல்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் மாறித்தான் முகவரி வந்து கொண்டிருக்கிறது. விக்கியில் கலந்துரையாடல் பக்கத்தில் என்முயற்சிகளை போட்டுவிட்டேன். இப்போதைக்கு புதிய பயனர் கணக்கு உருவாக்கித்தான் போடவேண்டுமென்கிறது. அவருக்கு தேவை பல்வேறு வகையான இணைய சார் மென்பொருளிலும் எவ்வாறு வேலை செய்கிறது என்று அறிவது என்று நினைக்கிறேன். புகுபதிகை செய்ய இயலாதவர்களுக்கு என்ன வழி என்று தெரிந்தவர்கள் சொல்லவும். உங்கள் சோதனைகளை இங்கு பின்னூட்டமிடுங்கள். கனவு மெய்ப்பட்டும்.

நம் கல்விமுறை உருப்படுமா?

இலவசமாய் அரிசி கொடுக்கிறார்கள், தொலைக்காட்சி பெட்டி தவிர சாப்பாடும் போடுகிறார்கள். இதெல்லாம் விட்டு இலவசமாய் கல்வி கொடுத்தால் என்ன கேடு வந்துவிடும். அனைவருக்கும் கல்வியும் மருத்துவமும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று ஒரு அரசியல் வாதிக்காவது தோன்றுமா? கல்விக்கு Cess என்று ஒன்று போன வருடம் போட்டார்கள். என்ன ஆயிற்று அந்த பணம்? யாருக்காகவாது இலவசக்கல்வி கொடுப்பார்களா? கொடுத்தார்களா?. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போனால் Donation என்றும் வருடாந்திர கட்டணம் என்று இன்றும் கொடுக்கவேண்டி இருந்தது. இன்றும் இருக்கும். ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டுமென்றால் கட்டாயம் கொடுக்க வேண்டும். அங்கேயே பிரிவினை. காசுள்ளவன் ஆங்கிலம் படிப்பான் காசில்லாதவன் தமிழ் படிப்பான் என்று. அரசாங்கப்பள்ளிகளிலேயே இந்த நிலைமை. எனக்கு தெரிந்து என் நண்பனின் அம்மா வீட்டு வேலை செய்து தான் படிக்கவைத்தாள். அவளிடம் ஆயிரம் ரூபாய் இல்லை. அதற்காக நாயாய் பேயாய் அலைந்து அந்த தாய் பணம் கட்டியது இன்றும் நினைவில் நிற்கிறது. கொடுமை என்னவெனில் மற்ற செலவுகளுக்கு அந்த அம்மா தலைமை ஆசிரியர் வீட்டிலேயே வேலை செய்து தான் 2 வருடம் மேல்நிலைக்கல்வி

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4