முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

கறுப்பு வெள்ளைப்படங்களும் உணர்ச்சிகளும்

செல்லா இந்த பதிவை போட்டு ஒரு குறு வாக்குப்பதிவு நடத்திக்கொண்டு இருக்கிறார். என்னுடைய முந்தைய பதிவில் மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே படங்களை இணைத்தேன். அதாவது படங்களே கறுப்பு வெள்ளையில் எடுத்தது. இல்லையென்றால் ஒப்புமைக்கு உதவும். Post Processing செய்ததில்லை. அதென்ன சரியா படமெடுக்காமல் கடைசில அத மாத்திக்கறது என்று ஒரு கேள்வி எனக்கு. அது அழுகுணி ஆட்டம் என்று ஒரு எண்ணம். இதே படச்சுருளில் எடுத்தால் இந்த மாதிரி சரி செய்ய முடியுமா என்று ஒரு துணைக்கோபம் வேறு. இதனாலேயே எந்த மென்பொருளும் இல்லாமல் இதுவரை ஓட்டிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் அதுவும் எல்லோரும் photoshopல் கலக்கும்போது (எங்க போனாலும் காசு கேக்குது) நான் மட்டும் கட்டற்ற மென்பொருள் அபிமானத்தில் GIMPஐ வைத்தும் picasaவை வைத்தும் கொஞ்சம் விளையாடலாம் என்று தரவிறக்கி வைத்திருந்தேன். மேல சொன்ன பதிவை பார்த்ததும் கொஞ்சம் விளையாடியதின் விளைவு இங்கே. படத்தை உபயோகிக்க அனுமதி தந்ததற்கு வி. ஜெ. சந்திரனுக்கு நன்றி. அவரின் ஒரிஜினல் இங்கே. ஒரு சின்ன கத்தரிப்பு. அப்புறம் ஒரு கறுப்புவெள்ளையாக்கல் இதில் சொல்லுங்கள் உங்கள் ஓட்டு எதுக்கு? கறுப்பு வெள்ளை

புகைப்படப் போட்டிக்கு - 2

அதென்னவோ கறுப்புவெள்ளை மாதிரி உணர்ச்சிகளை மட்டும் காண்பிக்க வண்ணப்படங்கள் வரமாட்டேன் என்கிறது. என்னுடைய இரண்டு. கள்ளமில்லாச்சிரிப்பும் தூக்கம், அழுகை மற்றும் கேள்வியும்.