முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கறுப்பு வெள்ளைப்படங்களும் உணர்ச்சிகளும்

செல்லா இந்த பதிவை போட்டு ஒரு குறு வாக்குப்பதிவு நடத்திக்கொண்டு இருக்கிறார். என்னுடைய முந்தைய பதிவில் மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே படங்களை இணைத்தேன். அதாவது படங்களே கறுப்பு வெள்ளையில் எடுத்தது. இல்லையென்றால் ஒப்புமைக்கு உதவும்.






Post Processing செய்ததில்லை. அதென்ன சரியா படமெடுக்காமல் கடைசில அத மாத்திக்கறது என்று ஒரு கேள்வி எனக்கு. அது அழுகுணி ஆட்டம் என்று ஒரு எண்ணம். இதே படச்சுருளில் எடுத்தால் இந்த மாதிரி சரி செய்ய முடியுமா என்று ஒரு துணைக்கோபம் வேறு. இதனாலேயே எந்த மென்பொருளும் இல்லாமல் இதுவரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.




சமீபத்தில் அதுவும் எல்லோரும் photoshopல் கலக்கும்போது (எங்க போனாலும் காசு கேக்குது) நான் மட்டும் கட்டற்ற மென்பொருள் அபிமானத்தில் GIMPஐ வைத்தும் picasaவை வைத்தும் கொஞ்சம் விளையாடலாம் என்று தரவிறக்கி வைத்திருந்தேன். மேல சொன்ன பதிவை பார்த்ததும் கொஞ்சம் விளையாடியதின் விளைவு இங்கே.


படத்தை உபயோகிக்க அனுமதி தந்ததற்கு வி. ஜெ. சந்திரனுக்கு நன்றி. அவரின் ஒரிஜினல் இங்கே.


ஒரு சின்ன கத்தரிப்பு.















அப்புறம் ஒரு கறுப்புவெள்ளையாக்கல்









இதில் சொல்லுங்கள் உங்கள் ஓட்டு எதுக்கு?


கறுப்பு வெள்ளையில் உங்கள் கவனம் முகத்தில் இருக்கும் வண்ணத்தில் உங்கள் கவனம் சிதறும். இதே காரணத்தால் தான் பழைய திரைப்படங்களை பார்த்தால் எல்லோருமே நல்ல நடிகர்களாக\அழகாக இருப்பார்கள் அல்லது தோன்றுவார்கள். எல்லா கவனமும் கதைமாந்தரின் முகத்தில் இருக்கும். ஒரு சின்ன மேக்கப் கூட போதுமாயிருந்துருக்கும். (உ.ம். விகேராமசாமி,பாலையா) இன்னும் சொல்லப்போனால் நம்ம வண்ணமயமான ராமராஜன் கூட கறுப்பு வெள்ளையில நடிச்சிருந்தா பெரியா ஆள் ஆயிருப்பாருன்னு நினைச்சுப்பேன்.

கருத்துகள்

Anand V இவ்வாறு கூறியுள்ளார்…
//இதே படச்சுருளில் எடுத்தால் இந்த மாதிரி சரி செய்ய முடியுமா என்று ஒரு துணைக்கோபம் வேறு.
////



ஏன் முடியாது ? இப்போது photoshop உபயோகப்படுத்தும் அனைத்து முறைகளும் படச்சுருள் காலக்தில் இருந்து வந்தவைதான். என்ன நம்மை போல எல்லோராலும் எளிதாகச் செய்து விடமுடியாது, கொஞ்சம் காசுப் போட்டு dark room/ studio ஏற்பாடு செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
Vijayakumar இவ்வாறு கூறியுள்ளார்…
கருப்பு வெள்ளை சூப்பர்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
hello sir

check the online tamil radios list

www.tamilradio.co.nr

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4