முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் அழிந்துவிட்டால்

நாளை உலகம் அழிந்துவிட்டால் நாம் இன்று கண்டுபிடித்திருக்கும் பல விடயங்கள் அழிந்துவிடும். அறிவியலார் டைனசர் காலத்தில் ஒரு கோள் விழுந்து உயிரினங்கள் அழிந்துவிடடதாக கூறுகின்றனர். நாளை உலகம் அந்த மாதிரி அழிந்துவிட்டால் எஞ்சப் போவது என்ன? நாம் கட்டிய உயர்ந்த கட்டிடங்களும் மிஞ்சும் சில கிறுக்கல்களும் தான். யாருக்கு தெரியும் காதலன் காதலி பெயரை கிறுக்கி இருக்கும் பாறைகள் மிஞ்சினால் உண்டு. கொஞ்சம் சிந்தித்தால் நாம் அறிவால் உணர்ந்த விடயங்கள அடுத்து வரும் மனிதர்கள்(அவர்களும் மனிதனைப்பொன்ற ஒரு உயிரினம்) நம்மை பற்றி என்ன அளவிடுவார்கள். இன்னும் கொஞ்சம் இந்த சிந்தனையை நீட்டினால் ஏன் நாம் கூட நம் மூதாதையரின்(அப்படி அழிந்து போயிருந்தால்) அறிவை பற்றி நாம் ஏன் தவறான ஒரு கண்ணோடத்தை பெற்று இருக்க கூடாது?

தமிழனின் வரலாறு

பாரதி தற்கொலை செய்துகொண்டாரா? என்ற இந்த பதிவை கண்டதும், எனக்கு மிகவும் பிடித்த கவிஞனை பற்றியே எனக்கு எதுவும் தெரியவில்லை என்ற சுயகோபம் எழுந்தது. இதுவே எனக்கு பாடபுத்தகத்திலும் படித்த நினைவு. கொஞ்சம் தேட மெனக்கெட்டால் ஒரு குழப்பமான பதிலே எல்லா இடத்திலும் கிடைத்தது. தமிழில் ஒரு உயர்ந்த இடத்தை பிடித்த பாரதிக்கே இந்த நிலைமை. நமக்கு வரலாறு பற்றிய ஒரு சுயபிரஞ்ஞை இல்லாமல் இருப்பதால் பல விடயங்களை இழந்துவிட்டோம். ஒரு நூறு ஆண்டுகட்கு முன்பு நடந்த ஒரு வரலாறே நம்மிடம் இல்லை எனும் போது மிகவும் வெட்ககேடாக இருக்கிறது.