முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழனின் வரலாறு

பாரதி தற்கொலை செய்துகொண்டாரா? என்ற இந்த பதிவை கண்டதும், எனக்கு மிகவும் பிடித்த கவிஞனை பற்றியே எனக்கு எதுவும் தெரியவில்லை என்ற சுயகோபம் எழுந்தது. இதுவே எனக்கு பாடபுத்தகத்திலும் படித்த நினைவு. கொஞ்சம் தேட மெனக்கெட்டால் ஒரு குழப்பமான பதிலே எல்லா இடத்திலும் கிடைத்தது. தமிழில் ஒரு உயர்ந்த இடத்தை பிடித்த பாரதிக்கே இந்த நிலைமை. நமக்கு வரலாறு பற்றிய ஒரு சுயபிரஞ்ஞை இல்லாமல் இருப்பதால் பல விடயங்களை இழந்துவிட்டோம். ஒரு நூறு ஆண்டுகட்கு முன்பு நடந்த ஒரு வரலாறே நம்மிடம் இல்லை எனும் போது மிகவும் வெட்ககேடாக இருக்கிறது.

கருத்துகள்

Arun's Thoughts இவ்வாறு கூறியுள்ளார்…
வரலாற்றைப் போற்றுவதற்கு, நாம் வெளிநாட்டவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். முன்னூறு வருடங்களுக்கு முன் நடந்ததையே பெருமையாகப் பேசிக் கொள்வார்கள், ஆனால் நம் நாட்டிலோ, ஆயிரம் வருடத்திற்கு முன்பு நடந்தைக் கூட பெருமையாக பேசிக் கொள்ள மாட்டார்கள், இது தான் நிலைமை.

அன்புத்தோழி
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
தோழி, வருகைக்கு நன்றி.
Arun இவ்வாறு கூறியுள்ளார்…
"வறுமையும் புலமையும்" என்ற சொல்லுக்கேற்ப்ப தான் புலவர்களின் வாழ்வு இருந்திருக்கின்றது..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4