பாரதி தற்கொலை செய்துகொண்டாரா? என்ற இந்த பதிவை கண்டதும், எனக்கு மிகவும் பிடித்த கவிஞனை பற்றியே எனக்கு எதுவும் தெரியவில்லை என்ற சுயகோபம் எழுந்தது. இதுவே எனக்கு பாடபுத்தகத்திலும் படித்த நினைவு. கொஞ்சம் தேட மெனக்கெட்டால் ஒரு குழப்பமான பதிலே எல்லா இடத்திலும் கிடைத்தது. தமிழில் ஒரு உயர்ந்த இடத்தை பிடித்த பாரதிக்கே இந்த நிலைமை. நமக்கு வரலாறு பற்றிய ஒரு சுயபிரஞ்ஞை இல்லாமல் இருப்பதால் பல விடயங்களை இழந்துவிட்டோம். ஒரு நூறு ஆண்டுகட்கு முன்பு நடந்த ஒரு வரலாறே நம்மிடம் இல்லை எனும் போது மிகவும் வெட்ககேடாக இருக்கிறது.
பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக...
கருத்துகள்
அன்புத்தோழி