முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயாக்கா!!

ஊருக்கே அவர் ஜெயாக்கா தான்.4;30 க்கு எழுந்து டாக்டர் வீட்டுக்கு சொஸைட்டியில் பால் வாங்கி வருவதிலிருந்து பதிணொண்ணோ பன்னிரண்டோ அடிக்கும் வரை வாரம் ஏழு நாட்களும் ஊரெல்லாம் கால்கள் ஓடிக்கொண்டிருக்கும். நாலே நாலு மிக நீண்டதெருக்களுள்ள ஊரில் அவர் வேலை செய்யாத வீடு என்று எதுவும் கிடையாது.

தாலுகாபீஸ் அம்மாவுக்கு வீட்டிலேயே பிரசவத்தின் போது செவிலி வேலை முதல் குழந்தைவளர்ப்பு வேலை. கடைக்காரர் வீட்டில் தினசரி வீட்டு வேலை. மைத்துனரின் ஓட்டலில் பாத்திரம் தேய்க்கும் வேலை இதைத்தவிர ஒரு அலுவலகத்தை பெருக்கும் வேலை இதைத்தவிர அவ்வப்போது அழைக்கும் வேலைகள் என்று வேலை ஓடிக்கொண்டிருக்கும். பொதுவில் ஊர் அவரிடம் மிகவும் அன்பாகவே நடந்துகொண்டது. அல்லது இளம்பருவத்தில அவ்வாறே எனக்குப்பட்டது.

தேவையென்றால் கடன் வாங்கிச்செல்வார் வேறு ஒருவரிடம் கடன் பெற்றோ உழைப்புக்கு முனபணமோ பெற்று அந்தக் கடனை சில வாரங்களில் அடைப்பார். உழைப்பு மட்டுமே மூலதனம். ஒரே கனவு, குறிக்கோள் வகைக்கு இரண்டான தன் நான்கு குழந்தைகளையும் படிக்க வைக்கவேண்டும் என்பதே. பெரியவனுக்கு பத்து வயதிருக்கும். கடைசி பெண்ணுக்கு மூன்று நான்கு வயதிருக்கும்.கணவர் பெரும் குடிகாரர். வேலை எல்லாம் செய்து பார்த்ததே கிடையாது. எப்போதாவது ஜெயாக்கா அம்மாவிடம் தெருவில் போகும் போது நாலு வார்த்தை பேசிவிட்டுப் போவார். அச்சமயம் அடியும் சண்டையும் பற்றி ஓரிரு வார்த்தே சொல்லக்கேட்டு இருக்கிறேன். வேலைக்கு ஆள் வைக்கும் அளவுக்கு எங்கள் வீட்டு பொருளாதாரம் இடம் கொடுத்ததில்லை. ஒருமுறை ஏதோ காரணத்திற்காக வீட்டுக்கு வந்தவர் வீட்டின் ஒரு மூலையில் படுத்து உறங்கிவிட்டார். அவர் திடீரென்று படுத்து தூங்கிட்டார் என்று அம்மாவிடம் போய் சொன்னேன். அம்மா பதறி அடித்து ஓடி வந்து தண்ணீர் தெளித்து எழுப்பி சாப்பிட வைத்தார்கள். மயக்கம் என்ற வார்த்தையும் அதற்கான விளக்கமும் முதல் முறை அப்போது தான் தெரியும். சரியாகப் புரியவில்லை.

மைத்துனர் வைத்திருந்த சிறிய சாப்பாட்டுக்கடையில் கூட வேலை செய்வாரே தவிர சாப்பிட மாட்டார். குழந்தைகளையும் சாப்பிட அனுமதிக்க மாட்டார். அவருக்கு தெரியாமல் கொடுத்தால் தான் உண்டு.

பெரியவன் ஒரு முறை பீடி பிடிக்கிறான் என்று தெரிந்தது அவருக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருந்திருக்கவேண்டும். அடி பின்னி எடுத்துவிட்டார். கணவரைப்போல தன் மகனும் சீரழிந்து விடுவானோ என்று பயந்து விட்டார்.கடன் கொடுத்தவரோ யாரோ என்ன சொன்னார்களோ தெரியவில்லை ஒரு நாள் பெரியவனை தவிர மற்ற மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு வெகு தொலைவில் இருந்த BDO அலுவலக கிணற்றில் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி போட்டு விட்டார். என்ன புரிந்ததோ தெரியவில்லை அம்மா செய்வதை பார்த்த இளைய மகன் அங்கேயிருந்து ஓட ஆரம்பித்துவிட்டான். கண்ணெதிரே மகள்கள் இறப்பதையும் பார்த்துவிட்டு கடைசி நமிட பயத்தில் ஆலாய்ப்பறந்து விட்டு கிணற்றில் குதித்துவிட்டார் ஜெயாக்காவும். எதிர்பாரா இடத்தில் சிறுவன் ஓடிவருவதைப்பார்த்த பெரியவர் ஒருவர் பிடித்து கேள்வி கேட்க அவன் சொன்னதைக்கேட்டு ஓடிப்போய் கிணற்றில் குதித்து ஜெயாக்காவையும் குழந்தைகளையும் காப்பாற்றி இருக்கிறார். ஜெயாக்கா மட்டுமே பிழைத்தார். நீதிமன்றத்தில் கொலை செய்யத்திட்டமிட்டது, தற்கொலை முயற்சி, இரண்டு கொலைகள் என்று பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை கொடுத்த அன்று அவருடைய கணவர் தெருத்தெருவாக குடித்துவிட்டு பைத்தியம் பிடித்ததுபோல் ஓடியது இன்றும் நினைவில் இருக்கிறது.அவர் மகன் சில மாதங்களுக்கு பிறகு தற்கொலைக்கு முயன்று சிறவர் சிறைச்சாலையிலோ மனநலகாப்பகத்திலோ சில மாதங்கள் இருந்து விட்டு படிப்பை நிறுத்தி விட்டு வேலை செய்யப்போய்விட்டான்.

சில மாதங்கள் தனிமைச்சிறையில் இருந்து விட்டு பொதுசிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட ஜெயாக்கவை மாதம் ஒருமுறை வேலூர் சிறைக்கு போய் வந்து மனைவி நன்றாக இருப்பதாகவும் இறந்த குழந்தைகளை நினைத்து அழுவதாகவும் மட்டும் தானாகவே சொல்லித்திரிவார் கணவர். குடியை மொத்தமாக நிறுத்திவிட்டதாகவும் எப்போதாவது குடித்துவிட்டு விழுந்து கிடந்ததாகவும் ஊர் சொல்லக்கேள்வி.

காந்தி பிறந்த நாளை உலக மதுஒழிப்பு தினமாக அறிவிக்க இந்திய அரசு கோரி இருந்தது என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

கருத்துகள்

யாசவி இவ்வாறு கூறியுள்ளார்…
It is heart touching
good go ahead
நசரேயன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையா இருக்கு சத்தியா, நிறைய எழுது
அருமையான நடை
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்லா இருக்கு

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். யாரந்த ஜெயாக்கா. எந்த ஊரு?
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வில்லன்,
எந்த ஊரா இருந்தா என்னங்க. எதுக்காக கேக்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4