தேன்கூட்டில் பதிவு செய்து ஒரு மாதத்திற்க்கு மேலாகிறது. ஒரு எதிர்வினையையும் காணோம். Pending approval அப்பிடின்னே சொல்லிக்கிட்டு இருக்கு. மின்னஞ்சல் எல்லாம் அனுப்பி பாத்தாச்சு. ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. நம்ம feedல தான் பிரச்சனை அப்பிடின்னு ஆதம் ஓடைக்கு மாறிட்டேன். தமிழ்மணத்துக்கும் RSS பிடிக்கலை. feedvalidator.org ஆதம் பக்கவா இருக்குன்னு சொல்லுது. என்னோட வலைப்பூவுல பிரச்சனையா இல்லை தேன்கூட்ல பிரச்சனையா? யாராவது விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.
பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக...
கருத்துகள்