முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூடா நட்பு

முகம் பார்த்து சிரிக்கும் நண்பா
புறம் பார்த்து தூற்றுவதேன்
உயிர்காப்பதாய் சபதஞ்செய்து
சிறு உதவிக்கு ஓடுவதேன்

துன்பம் வரும் வேளையிலே
தோள் கொடுத்தேன்
மாற்றாய் உடுக்கை இழக்கையிலே
துன்பத்தை தருவதேன்

மென்னிதயம் கொண்டோர்
துயரங்கொள் வேளையிலே
கலங்கிப்போன மனக்குளத்தில்
கொடுஞ்சொற்கல் எறிந்துவிட்டு
பிணக்கை உருவாக்கும்
சினத்துக்குறியதாய் சிறுமை பலசெய்து
மனத்துக்கினியவாய் வாய்மலர்ந்து
புற அழகாய் நட்புமுகமேன்

துன்பமுற்றோர் வாழ்வதனில்
அன்பொழுகப் பேசாமல்
வன்மனத்தால் சூதுசெய்து
பழிபாவம் நோக்காமல்
மனக்குரங்கின் தும்பைவிட்டு
சுடுசொல்லால் தீங்கிழைக்கும்
துன்மதியார் வாசலைத்தான்
பேதையே நீ மிதிப்பதேன்?

கருத்துகள்

நளாயினி இவ்வாறு கூறியுள்ளார்…
என் மனதிற்கு ஒத்தடம் தந்த கவிதை.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நளாயினி.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
என்னாச்சுங்க? முந்தைய இடுகையும் இதுவும் சோகமா இருக்கு?

புது வார்ப்புரு நல்லா இருக்கு..என்னைப் பற்றியும் மின்மடல் பக்கமும் திறக்கல..என்னன்னு கவனிங்க
PPattian இவ்வாறு கூறியுள்ளார்…
யாரோ எப்பவோ உங்களை உதாசீனம் செய்ததை எழுதுறீங்களா? இல்ல இப்ப ஏதாவது ஆயிடுச்சா? கவிதை நல்லா இருக்கு..
வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம்ம்ம்,
நல்ல கவிதை. அனுபவம் தந்த பாடமோ?-:))
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
ரவி,ஹரிதரன்,வெற்றி,
நீங்கள் எல்லோர் சொல்வதும் உண்மை.
ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
ஏங்கோ கேள்விப்பட்டது
எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன் இறைவா நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று. ;-)
உண்மை இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4