முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

.......னா?

1.நண்பன் கூப்பிட்டு அவசரத் தேவையென 24 மணி நேரத்தில் என் சேமிப்பு முழுதையும் கேட்டால் கொடுப்பேனா?
2. பொய் சொல்லாமல் சோம்பேறித்தனத்தால் காலதாமதமானதை சொல்வேனா?
3.ஞானம் அதிகமில்லை, சரக்கு இவ்வளவு தான்னு உண்மையச் சொல்லி வேலைக் கேட்பேனா?
4.Treat என்ற பெயரில் ஓசிச்சாப்பாடுக்கு அலையாமல் இருப்பேனா?
5.ஒரு வருடத்திலாவது எடுத்த சபதத்தை நிறைவேற்றுவேனா?
6.ஒரு நாளாவது எடுத்த வேலையை முழுவதுமாய் செய்து முடிப்பேனா?
7.ஒரு விளையாட்டையாவது ஒழுங்காய் கற்பேனா?
8.அலுவலக சந்திப்புகளில் சிரிப்பே வராத ஜோக்குகளுக்கு அசட்டு சிரிப்பு சிரிக்காமல் இருப்பேனா?
9.மீட்டிங்குகளில் கேட்ட கேள்விகளுக்கு சரியான விடையை தடுமாறாமல் சொல்வேனா?
10.வீட்டிலிருந்தும் ஒரு நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பேனா?
11.ஒரு தடவையாவது அலுவலகத்திற்கு பொய் சொல்லி லீவு போடுவேனா?
12.நாளை பிள்ளை வளர்ந்து, சொல்லும் புதுமைக்கருத்துகளை தடுக்காமல் ஏற்பேனா?
13.மற்றவரிடம் பேசும் பொழுது எல்லாம் தெரிந்த மாதிரி நடிக்காமல் இருப்பேனா?
14.தெரிந்தவர்களிடம் பேசும் போது, என் எண்ணம் தான் உயர்ந்ததென மனதில் தோன்றாமல் இருப்பேனா?
15.காசும், பதவியும் வந்தாலும் ஆணவமில்லாமல் இருப்பேனா?
16.ஒரு நாலுப்பேருக்காவது உபயோகமாய், நல்ல நண்பனாய் இருப்பேனா?
17.என் பிள்ளையை தமிழ் படிக்கவைப்பேனா?
18.பிற்காலத்திலாவது கூலி வேலையை விட்டுவிட்டு மனதிற்கு பிடித்த எம் முன்னோர் செய்த விவசாயம் செய்வேனா?
19.ஊருக்கு உபதேசிப்பதை விட்டு விட்டு உருப்படியாய் இருப்பேனா?
20. வெட்டி அரட்டை, வீண்ணாண இணையமேயல் செய்யாமல் வாங்கும் கூலிக்கு வேலை செய்து கொடுப்பேனா?

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Até mais.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா.. நம்ம புகழ் எங்கெல்லாம் பரவி இருக்கு. யாரோ புரியாத பாஷைல எல்லாம் திட்றாங்களே!!.
இது என்ன மொழி? French, Spanish, German மூணுத்துலையும் மொழிபெயர்த்து பாத்துட்டேன்.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியா, இந்த இடுகையைச் சிறிது திருத்தி என் பதிவில் நாட்குறிப்பு வகையில் போட அனுமதிப்பீர்களா ;) :(
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வீட்டுக்கு வீடு வாசப்படியா.. ;-)
தாரளமா போடுங்க ரவி!!
அன்புத்தோழி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த பதிவிற்கு பின்னூட்டம் போடாமல் இருப்பேனா?

//11.ஒரு தடவையாவது அலுவலகத்திற்கு பொய் சொல்லி லீவு போடுவேனா?//

பொய் சொல்லி லீவு போட்டால், அது ஒரு தனி சுகம் தான். இப்படி உண்மையைச் சொல்லி லீவு போடுரீங்களே, உங்களுக்கே இது அடுக்குமா?
PPattian இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆகா.. நம்ம புகழ் எங்கெல்லாம் பரவி இருக்கு. யாரோ புரியாத பாஷைல எல்லாம் திட்றாங்களே!!.
இது என்ன மொழி? Fரென்ச், ஸ்பனிஷ், Gஎர்மன் மூணுத்துலையும் மொழிபெயர்த்து பாத்துட்டேன். //

ROTFL.. என்னங்..னா? அவ்வளவு பேமஸா நீங்க?

என்னிடமும் இந்த மாதிரி னா? கேள்விகள் நிறைய இருக்கு...

அப்புறம் உங்களை நான் எட்டு போட அழைக்கிறேன். உங்களை நீங்களே நினைத்து பெருமைப் படும் 8 விஷயங்கள் எழுதவும். நன்றி..
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
னா னா..ன்னு முடியறது மாதிரி ஒரு பாட்டு வரும்.. அதுக்குத் தான் வேற வரிகள் எழுதி பார்த்தீங்களோன்னு நினைச்சேன்.

முதல்ல வந்த ரோத்ரிகோ போர்டுகீஸ் பேசுறார்னு நினைக்கிறேன்.. அதில் மொழிபெயர்த்தால் புரியுறாப்புல இருக்கு... உங்க செல்வாக்க பயன்படுத்தி இலவசமாவே அந்த டீசர்ட்ட வாங்கிக் கொடுத்தீங்கன்னா.. ;)
நந்தா இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப யோசிக்க வெக்கறீங்களே???

//வீட்டுக்கு வீடு வாசப்படியா.. ;-)//

யேதான்........
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
ஹரிதரன்,
//உங்களை நீங்களே நினைத்து
பெருமைப் படும் 8 விஷயங்கள் எழுதவும்//
இந்த வம்பே வேண்டாம் அப்பிடினுதான பின்னூட்டம் போடலைன்னு சொன்ன அப்புறம் கூட மாட்டி விடுறீங்களே இது ஞாயமா?

பொன்ஸ்,
போர்த்துகீசிய மொழினு சொன்னதுக்கு பரிகாரமா, 2 T shirt சொல்லி இருக்கேன். வந்து சேர்ந்த அப்புறம் சொல்லுங்க ;-)
நளாயினி இவ்வாறு கூறியுள்ளார்…
இதில் பலது இல்லை சிலது யெஸ்.
வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியா,

உங்களின் பதிவை வாசித்ததும், நீங்கள் குறிப்பிட்டுள்ள பல கருத்துக்களில் என்னையே நான் நிலைக்கண்ணாடியில் பார்ப்பது போன்று உணர்ந்தேன்.

குறிப்பாக கீழுள்ளவை எனக்கு மிகவும் பொருந்தும்.

1. பொய் சொல்லாமல் சோம்பேறித்தனத்தால் காலதாமதமானதை சொல்வேனா?

2.ஞானம் அதிகமில்லை, சரக்கு இவ்வளவு தான்னு உண்மையச் சொல்லி வேலைக் கேட்பேனா?

3. ஒரு வருடத்திலாவது எடுத்த சபதத்தை நிறைவேற்றுவேனா?

4.அலுவலக சந்திப்புகளில் சிரிப்பே வராத ஜோக்குகளுக்கு அசட்டு சிரிப்பு சிரிக்காமல் இருப்பேனா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக