முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மங்கும் மின்மினி

ஒரு வாரமாக உங்கள் எல்லோரையும் படுத்தி வந்தது ஒரு வழியாக இன்று முடிவுக்கு வருகிறது. எல்லா நாளும் வலைபதிய வேண்டும் என்பது என்னைப்பொருத்த அளவில் சவாலாகவே இருந்தது. எல்லாவற்றையும் முதலிலேயே திட்டமிட்டு சரிசெய்து குறிப்பெல்லாம் எடுத்துக்கொண்டு எழுத தொடங்கும் சில நாட்களிலேயே நான் எழுத நினைத்ததை வேறு சிலர் எழுதியதும் நடந்தது அடுத்த விஷயம் பின்னூட்டம் வந்து இருந்தால் பார்த்து பதில் சொன்னது. இவ்வளவு நாள் நான் கவலைப்படாமல் இருந்தது அடுத்தவர்களுக்கு பின்னூட்டம் இடாதது. எப்போதாவது ஒரு பின்னூட்டம் போடுவதோடு சரி. இப்போது புரிகிறது எந்த அளவுக்கு பின்னூட்டம் இடுவது அடுத்தவரை உற்சாகப்படுத்துகிறது என்று.

தமிழ்மணத்தில் கடந்த ஒரு வாரத்தில் வந்த மொத்த இடுகைகள் ஆயிரத்தை தாண்டும் இதில் என்னுடைய ஏழே ஏழை மட்டும் தலைப்பில் நிலைக்க வைத்து மதிப்பு கொடுக்கும் அளவுக்கு தரமானதாக இருந்ததா என்று தெரியவில்லை. நட்சத்திரமாக இருக்க அழைத்த தமிழ்மணத்துக்கும் உற்சாகம் கொடுத்த சக பதிவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும்.


கருத்துகள்

துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல வாரமாகவே இருந்துச்சுங்க.

பதிவர்களுக்கு இப்படி ஒரு கூடுதல் வெளிச்சம் கொடுக்கும் தமிழ்மணத்தைத்தான்
பாராட்டணும் நாமெல்லாம்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
துளசி,

\\பதிவர்களுக்கு இப்படி ஒரு கூடுதல் வெளிச்சம் கொடுக்கும் தமிழ்மணத்தைத்தான்
பாராட்டணும் நாமெல்லாம். \\
கட்டாயமா.
கண்மணி/kanmani இவ்வாறு கூறியுள்ளார்…
சாரி சத்யா உங்க நட்சத்திர வாரத்தில் வாழ்த்தி ஒரு நாள் பின்னூட்டமிட்டேன்.அது ஏதோ கோளாறாகி பப்ளிஷ் ஆகலை
anyhow belated wishes sathiya
நாகை சிவா இவ்வாறு கூறியுள்ளார்…
மன்னிக்கவும் தல.. உங்க நட்சத்திர பதிவை வேலைப்பளுவின் காரணமாக மிஸ் ஆயிடுச்சு...

இலவச கொத்தானர் பெயர் போட்டு இருந்த பதிவை மட்டும் பார்த்தேன், படங்கள் அருமை....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4