முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகைப்படப் போட்டிக்கு

புகைப்படப் போட்டின்னு வந்தப்புறம் கலந்துக்கலைன்னா எப்படி? சரி வீட்டுக்கு போன அப்புறம் மடிக்கணினிலேந்து தோண்டி கொஞ்சம் சாவகாசமா இதுவரை இங்க போடத படமா, நல்லதா போடலாம்னு இருந்தேன்.



பார்த்தா அதுக்குள்ள 16 பேர் பின்னூட்டம் போட்டுட்டாங்க. இன்னும் விட்டா 30 என்ன முன்னூறே போட்டுடுவாங்க.



அதனால் இரண்டை இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன்.

கருத்துகள்

Boston Bala இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக இருக்கிறது!
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி பாலா!!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
unggaludaiya blogspot name photola pottathala azhagu pazappOchchu.. athai muthalla eduththudungga..
Deepa இவ்வாறு கூறியுள்ளார்…
கலக்கல்.. அதுவும் மஞ்சள் பூ
மனதின் ஓசை இவ்வாறு கூறியுள்ளார்…
சத்யா.. இது சொந்தமா எடுத்ததா? இல்ல யாராவது :-)))

படங்கள் நல்லா இருக்கு..
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
பழனி,
உங்க ஆதங்கம் புரியுது. எனக்கு எப்படி தண்ணீர் போல எழுத்துகளை மிதக்க விடறதுன்னோ அல்லது கட்டம் கட்டி கீழ பேர் போடறதுன்னோ தெரியலை. தெரிஞ்சா சொல்லுங்க பண்ணிடலாம்.
தீபா,
நன்றி.

மனதின் ஓசை,
உங்களுக்கு எதுக்கு இப்படி சந்தேகம்னு தெரியலை. இன்னும் சில படங்களை அப்புறம் வலையேற்றுகிறேன். இன்னும் பல கேள்விகளோடு தான் படம் பிடிக்கிறேன். சிலது தேறுகிறது சிலது சொதப்புகிறது.

-சத்தியா.
வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
படங்கள் அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4