8/19/08

VoIPக்கு கதவை திறக்குது இந்தியா!!

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் நெடுநாளைக்குப் பிறகு ஒரு நல்லது நடக்கிறது. VoIP ஒரு வாய்ப்பு மிக்க நுட்பம். கூகிள் டாக் முதற்கொண்டு இணையத்தில் தொலைபேசும் பலரும் உபயோகிக்கும் நுட்பம். கடந்த பத்தாண்டுகளாக தொலைத்தொடர்பு துறை தாதாக்களையும் தாத்தாக்களையும் பயப்பட வைத்த வித்தை. PSTN எனப்படும் பழைய தொலைத்தொடர்பு நுட்பத்தில் இன்றும் உலகத்தில் பெருமளவு 'பேச்சு' நடைபெறுகிது. இதை குறிப்பிடத்தக்க நுட்ப அளவில் மாற்ற முயன்றது 'செல்பேசி' எனப்படும் Cellular நுட்பமே. இதுவும் 'கடைசி மைல்' எனப்படும் உங்கள் வீட்டுக்கும் தொலைத்தொடர்பு பின்னலின் நுனியில் உள்ள அலுவலுகத்துக்குமான தொடர்பை மாற்றியது. VoIP அடுத்த அளவில் இந்த வலைப்பின்னலையே மாற்ற முயன்று பெருமளவு மற்ற நாடுகளில் மாற்றியது.

இந்தியாவில் இதுவரை கணினி-கணினி பேச்சையும் கணினியிலிருந்து வெளிநாட்டு(VoIP அனுமதிக்கும் நாடுகளுக்கான) எண்களுக்கு பேச முடிந்தது. அதாவது முழுக்க இணையத்தில் 'பேச்சு' செல்வதாய் இருந்தால் அனுமதிக்கப்பட்டது. இந்தியாவிற்குள் ஒரு இணைய தொடர்பிலிருந்து நேரடியாக ஒரு தொலைபேசிக்கு பேச முடியாது.காரணம் இணைய சேவை நிறுவனங்களும் தொலைபேசி நிறுவனங்களுக்குமான தொடர்பு அனுமதிக்கப்படவில்லை. அதற்கு கட்டுப்பாடு இருந்தது. இதுவே அகலப்பட்டை இணைப்பை வைத்து தொலைபேசி கட்டணத்தை குறைக்க முயன்ற பல நிறுவனங்களுக்கும் இடைஞ்சலாக இருந்தது. இப்போது இதை அனுமதிப்பதால் என்ன நடக்கும்.

1. புதிதாய் Vonage போன்ற நிறுவனங்கள் தொன்றலாம்.
2. உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக்கு பேசும் கட்டணங்கள் பெருமளவு குறையும்.
3.இலவச (தரம்குறைந்த) மென்பொருள் பேச்சு வசதிகள் பெருகும்.
4. தொலைத்தூர தனிக்கட்டணம் என்ற தொல்லை ஒரேயடியாக ஒழியலாம்.
5. அலுவலங்களுக்குள்ளே தடையற்ற தொடர்பு கிடைக்க இது உதவும்.
6.குழப்பத்தை குறைக்க பத்து எண் தொடர்பு முறை பரவலாகும்.
7.BPO நிறுவனங்களுக்கு லாபம் பெருகும்.
8. கிராமங்களில் தொலைபேசித் தொடர்பு பரவலாகும்.
இன்னும் பல ..லாம்கள் நடக்கும்.

3 comments:

கூடுதுறை said...

இது ஏற்கனவே செய்து இருக்கவேண்டிய ஒன்று 3ஜீ தொழில்நுட்பம் நமது அரசியல்வியாதிகள் கையில் சிக்கி சீரழந்துக்கொண்டுள்ளது போல் இல்லாமல் உடனடியாக செய்தால் நமது நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளம் கண்டிப்பாக பெருகும்.

மாசிலா said...

என்ன செய்வது? ஒரு பக்கம் பார்த்தால், துணிச்சலுடன் எக்கச்சக்க‌ பணம் போட்டு முதலீடு செய்து ஆரம்பித்த அதிக இலாபம் சம்பாதிக்கவேண்டும் என்று ஆரம்பித்த புதிய தொழிலதிபர்கள், அதில் வேலை செய்யும் குடும்பங்கள் போன்ற இவர்களின் வாழ்க்கையையும் நாம் ஒரு பக்கம் பார்க்கவேண்டும் அல்லவா?

மறுபக்கம், விஞ்ஞானம், தொழில்நுட்பமும் வெகு வேகமாக மாறிக்கொண்டே போகிறது. அதையும் நாம் தொடர்ந்தாக வேட்ணும்.

தகவலுக்கு மிக்க நன்றி.

மாசிலா

முகவை மைந்தன் said...

அது ஏன் எப்பவுமே நம்ம நாட்ல மட்டும் ஆகக் கடைசியா முயற்சிக்கிறாங்கன்னு தெரியலை.

3G இந்தியாவுக்கு வர iphone தான் காரணம்னு எனக்குத் தோணுது ;-))))))

 
கற்றது கைமண்ணளவு © 2009