முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை.

தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும் ஈடுஇணையற்றவை. அம்புலிமாமாவைப்பொருத்தவரை அதன் அரசர் காலத்துக்கதைகளும், 'மண்டை வெடிக்க வைக்கும்' வேதாளத்தின் புதிர்கள் மிகவும் பிடித்தமானவை.
இவை இருந்தாலும் மிகவும் பிடித்தது கோகுலம். இதில் கடிதம் எழுதிப்போட்டு கருத்து சொல்வது(அப்போவே ஆரம்பிச்சாச்சு), உறுப்பினர் அட்டை வாங்கி நண்பர்களிடம் காண்பிப்பது என்று இருந்தது மேலாண்மையில் Cult marketing பற்றி எழுதும்போது Case studyக்கு உதவியது.

கோகுலத்தில் வரும் 16பக்க வண்ணப்படக்கதை இப்போதும் வருகிறதா என்று தெரியவில்லை. வீட்டுக்கே வரும் இதழுக்காக பொறுக்காமல் மாதாமாதம் எப்போது வரும் என்று கடைக்கே சென்று கேட்டு நச்சரித்ததும் இனிய நாட்கள்(கடைக்காரருக்கல்ல). அநியாயத்துக்கு காசு கேக்கறாங்க இப்போ. அப்போவே விற்பனை குறைவுன்னு புலம்புவாங்க அப்படி இருக்கையில் இலவசமா கொடுத்தா கொஞ்சம் விளம்பர வருவாயாவது வரும்.(கருத்து !!)

சரி இப்போ எதுக்கு இந்த ஊதுவத்தி சுற்றல்? வழக்கம் போல வெட்டியா இணையத்தை மேயந்த போது அம்புலிமாமா சிக்கியது. யாருக்காவது தெரியாமல் இருந்தா உதவட்டுமேன்னு ஒரு 'அறம் செய்ய விரும்பு'னதுதான்.

கருத்துகள்

Bee'morgan இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான தகவல் சத்யா.. ! நானும் இந்த இலக்கிய ஆர்வத்தில் அலைந்தவன்தான்.. :) பல வருடங்களுக்கான கோகுலம் புத்தகங்களை வீட்டில் அடுக்கி வைத்திருந்தேன்.. ஏதோ ஒரு பொங்கல் நாளுக்காய், வீட்டைச்சுத்தப் படுத்துகையில், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியும், கடைசியில் அப்பாவே ஜெயித்தார்.. :D.. என்ன செய்ய.. இப்பவும், ஊருக்குச் செல்கையில் எப்போதாவது கோகுலம், பெட்டிக்கடை கயிறில் கண்ணில் படுவதுண்டு. மின்கல மாதவன் என்றொரு தொடர்கதை வந்தது கோகுலத்தில்.. நினைவிருக்கிறதா.. ? அப்பப்பா.. இப்படி ஒரு பதிவைப் போட்டு, பயங்கரமா கொசுவர்த்தி சுத்த வச்சுட்டீங்களே.. ! :)
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
அம்புலி மாமா கண்டு பிடித்துக் கொடுத்த சத்யா!
வாழ்க வாழ்க!
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
bee'morgan
மின்கல மாதவன் என்றொரு தொடர்கதை வந்தது கோகுலத்தில்.. நினைவிருக்கிறதா.. ?

நன்றாகவே இருக்கிறது

அட பொன்ஸ்,
ரொம்ப நாளைக்கு அப்புறம் வரீங்க.
நன்றி.
ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல ஞாபகங்களைக் கிளறி விட்டீர்கள் சத்யா. கல்கியிலிருந்து கோகுலம் வந்த அன்று முதல் இதழை வாங்கி என் தந்தை முதலில் என் கையில் கொடுத்தது இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது. இவையெல்லாம் நம் தமிழை வளந்த்ததில் பெரும் பங்கு வகித்தது என்பதும் உண்மையே.

மாண்ட்ரெக் கதைகளை முத்து, இந்திரஜால காமிக்ஸ்ஸிலும் படித்திருப்பீர்களே.

அம்புலிமாமாவைப் போலவே வந்த பொம்மை வீடு, பாலமித்ரா படித்ததுண்டா?

சுட்டிகளுக்கும் மிக்க நன்றி சத்யா.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
ராமலக்ஷ்மி,

அட ஆமாம்.முத்து காமிக்ஸ் மறந்து போச்சு. நிறைய படிச்சிருக்கேன். பாலமித்ராவும்.

பொம்மைவீடா. கேள்விப்பட்டதுகூட இல்லையே. ஏன் வாங்கித்தரலைன்னு அப்பாகிட்ட சண்டை பிடிக்கிறேன். ;-))))
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பூந்தளிர் பிடிக்குமா உங்களுக்கு? அதில் வந்த “புலி வளர்ந்த பிள்ளை”, “கண்ணாடி மனிதன்”, “குள்ளன் ஜக்கு” போன்ற தொடர்களை படித்திருக்கிறீர்களா?

இரத்னபாலா-வை மறந்து விட்டீர்களா? அதில் டாக்டர் பூவண்ணனின் தொடர்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.
பிரேம்குமார் அசோகன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள தகவல்கள். நன்றி சத்யா...ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அம்புலிமாமா இணைப்பு செயல்படவில்லை. தளத்தின் பெயர், http://tamil.chandamama.com
இடையில் www வராது. சூப்பர் கதைகள் உள்ளன அங்கே..!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4