முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புரட்சி நாளை வருகிறது!!

இணையத்தை பத்துவைத்துவிட்டு இன்று மெதுவாக
கூகிளாண்டவர் கடைசியில் ஒத்துக்கொண்டுவிட்டார். ஓய்ந்துபோயிருந்த இணைய உலவிச்சண்டையை ஆளுக்கு பாதியாக IEயும் FFம் பிரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் இவ்வினிய காலத்தில் குட்டையைக் குழப்ப கூகிள் தன்னுடைய Chrome எனும் உலவியை நாளை வெளியிடுகிறது.
சில முக்கிய அம்சங்களாவன
1. திறந்தவூற்று மென்பொருள்

2. முக்கமுழுக்க புதிதாக Javascript VM ஒன்றை v8 எனும் புதிய இயங்கி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்(மற்ற உலவிகளில் இதை வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம்.

3. ஒரே ஒரு tabஐ மட்டும் மிகுந்த கட்டுப்பாடுடன் இயக்கமுடியும். அதாவது அதில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தொட்ர்பு கொண்ட வழங்கிக்கி மட்டுமே அறியமுடியும். இதனால் கடவுச்சொல் திருட்டு, உங்களுக்கு தெரியாமல் கணினியில் மென்பொருள் நிறுவுவது, கடனட்டை விவரத்தை திருடுவது போன்றவை திருடாமல் தடுப்படும்.

4. மிகமுக்கியமாக ஒவ்வொரு tabம் ஒரு தனிஉலவிபோல் செயல்படும் அதாவது ஒரு tab சிதைந்தாலோ இயங்காமல் நின்று போனாலோ அல்லது மென்பொருள் இடியாப்பச்சிக்கலில் செயலிழந்தாலோ எல்லாம் சிதையாது. சுருங்கச் சொல்லின் முன்பு browsers=> tabbed browsers என்று இருந்தது இனி browsers in tab என்றாகிறது.

5. webkitஐ அடிப்படையாக கொண்டு இயங்குவதால் வன்பொருள் சார்பின்றி கையடக்க கருவிகளிலும் வம்பின்றி இயங்கும்.

6. ஒரு தொடக்க பக்கத்தில் நீங்கள் அடிக்கடி செல்லும் பக்கங்களை நினைவில் வைத்து ஒரு சிறு சுவரொட்டி போல கொடுக்கப்போகிறது. (இதை operaவில் பார்த்திருக்கிறேன்.)

7. FF, Opera, IE போன்றவற்றின் நல்ல சங்கதிகளை உருவிய புதிய மொந்தை இது.

8. API களை இதோடு தருவதால் புதிய உலவிசார் மென்பொருட்களை உருவாக்க வழிவகுக்கிறது.

9. மிக அதிக வேகத்தில் இயங்கும் என்று கூகிள் உறுதி அளிக்கிறது.

10. உலவிகளுக்கென்று இதுவரை கட்டுப்பாடு கொண்ட வழிமுறைகள்(standards) இருந்ததில்லை இதன்மூலம் சில வழிமுறைகள் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

11. மெருகேறிய நினைவக குப்பை கூட்டலையும்(garbage collection :-)) சரி பண்ணி இருக்கிறது. கட்டாயம் நினைவக கசிவு இருக்காது என்று சத்தியம் செய்கிறது. பார்ப்போம்.

Geckoவிற்கும் Webkitக்கும் இருந்த போட்டி இந்த முறை webkitக்கு போகும் என்று நினைக்கிறேன். FFக்கு கடும் போட்டியை இது உருவாக்கப்போகிறது.
அடிப்படையில் இருந்த ஓட்டை உடசல்கள் சிலதை சரி செய்து இருக்கிறது.
சில புதிய சிக்கல்களை உருவாக்காமல் இருந்தால் சரிதான்
***
உரிமைத்துறப்பு மற்றும் இன்னபிற
* தலைப்பை வேறு எதோ பதிவில் எப்போதோ பாத்த நினைவு. யாராவது காப்புரிமை எடுத்திருந்தால் அடிக்க வராதீர்.
*மேலதிக விவரங்கள் இணையத்திலும், இங்கும், கூகிள் புத்தகத்திலும்.
*இன்னும் நிறைய சங்கதிகளை மற்ற பதிவுகளில் விவரமறிந்தோர் இன்னும் விவரமாக எழுதுவார்கள் ;-))

கருத்துகள்

முகவை மைந்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள தகவல். இப்பவே தகவல் மேய வேண்டியது தான்.

அறிவியல் தொடர்பான பதிவுகள் மட்டுமே இடுவது என்று உறுதி எடுத்துக் கொண்டது போல் தெரிகிறது;-)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
\\அறிவியல் தொடர்பான பதிவுகள் மட்டுமே இடுவது என்று உறுதி எடுத்துக் கொண்டது போல் தெரிகிறது;-)\\
அவ்வாறெல்லாம் ஒன்றுமில்லை. அரசியல், சினிமா எழுதுவதில்லை என்று மட்டுமே முடிவு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4