முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்றும் பதினாறு - 1

கணிப்பொறியின் அடிப்படை தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த விடயம் கணிப்பொறி ஒரு முட்டாள் பெட்டி அதற்கு தெரிந்ததெல்லாம் ஒன்றும் சுழியும் மட்டுமே என்று. ஆனால் பைனரி எனப்படும் இரும எண்ணில் கட்டளைகளை இடுவது நமக்கு மிகவும் கடினமானதும் மிக நீண்ட நிரல்களையும் உருவாக்க வேண்டியதுமாகிறது. இது மிகவும் பின்தங்கிய சில கணிணினுகளுக்கு மட்டுமே பொருந்தும். இன்று நாம் பல கருவிகளிலும் பயன்படுத்துவது Hex எனப்படும் 16ஐ அடிப்படையாக கொண்டியங்கும் கணிணித் தத்துவமே.

அதென்ன 16ன் அடிப்படை. அதற்கு முன் ஒரு குறுவரலாறு. நாம் உபயோகப்படுத்தும் எல்லா எண்களும் 10ஐ அடிப்படையாக கொண்டவை. நம் கைவிரல்கள் பத்து அதுவே நமது கணிதத்திற்கு இயற்கையான அடிப்படையாக அமைந்துவிட்டது. அதே போல் 8ஐ அடிப்படையாக கொண்ட octal முறையும் உபயோகத்தில் ஆதி காலத்தில் இருந்திருக்கிறது. எட்டு என்ற எண்ணிற்கு அவர்கள் கொண்ட அடிப்படையும் விரலகள் தான் சரியாகசொல்வதானால் விரல்கள் அல்ல விரலிடுக்குகள். இதே போல் 12 மற்றும் 60 ஆகிய அடிப்படைகளும் இருந்திருக்கறது. இதுவே இன்றும் நாம் பயன்படுத்தும் மணிக்கணக்கில் உபயோகப்படுகிறது.

எண் கணிதம், இடத்தை அடிப்படையாக கொண்டது. ஒரு எண் இருக்கும் இடத்தை பொறுத்து அதன் பெருக்கும் அளவு அமைகிறது. ஒன்று, பத்து, நூறு என்று எண்கள் இடத்தை கொண்டு அளவிடப்படுகிறது. அதனால்தான் 9க்கு அடுத்து 2 இலக்கத்திற்கு தாவுகிறோம். மொத்ததில் எண்களெல்லாம் 0-9 முடிய உள்ள 10 எண்களே. 16ன் அடிப்படை என்றால் எண்கள் 0-15 வரையும் அதன் பின்பு 2 இலக்கங்கள் தொடங்கும். அதாவது பதினாறின் மடங்காக இரண்டாவது இலக்கத்திற்கு போகும் போது, ஒரு பதினாறு முடிந்துவிட்டது என்றும் மூன்றாவது இலக்கத்திற்கு போகும் போது, 256 முடிந்துவிட்டது என்றும் பொருள் படும். அதற்கு முன் முதலில் இந்த 10ல் இருந்து 15 வரையுள்ள எண்களை எவ்வாறு உப்யோகிப்பது? அது பத்தை அடிப்படையாக கொண்டு 2 இலக்கம் வருகிறதல்லவா? அதனால் கணினியின் பிதாமகர்கள் ஒரு குறுக்கு வழி கண்டனர். இந்த 6 எண்களும் a, b, c, d, e, f என்று குறிக்கப்படுகிறது. அதாவது, 1,2,3,4,5..9,a,b,c,d,e,f,10,11,12..19,1a,1b,1c,1d,1e,1f,20... என்று நீளும்.

இந்த மாதிரி காஞ்சுபோன விடயமெல்லாம் வேண்டாம். இத்துறையில் பணி புரிவோரின் சின்ன சின்ன கேளிக்கைகளில் கூட இந்த hexadecimal இடம் பெறும். என் அலுவலக்கத்தில் இருப்போர் அடிக்கும் ஜோக். How is your hex life? பதிலாக வருவது "டெட்பீஃப்".
அது என்ன டெட்பீஃப்? ஏன் பதினாறு? சரி இதெல்லாம் வைத்து என்ன செய்கிறார்கள்? அது அடுத்த பதிவில்...

கருத்துகள்

அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்க தமிழ்ப் பதிவுலகம்..ஒரு பின்னூட்டமும் காணலை :)

தொடர்ந்து எழுதுங்க சத்தியா..இதுவும் எனக்குப் புதுத் தகவல்
வடுவூர் குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
அடுத்த பதிவை கானும்?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
0xDEADBEEF :) இதோட அடுத்த பதிப்ப சீக்கிரம் வெளியிடுங்க.. மின்னணு தமிழ் சொற் களஞ்சியம் அதி அவசியம்.. அதுக்கு மேல தமிழில் அதை ஒட்டிய கருத்து மோதல்கள்.. தொடங்கி வைங்க.. சுஜாதா சந்தோசப்படுவாரு..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4