முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகைப்படப் போட்டிக்கு - 6

இது போட்டிக்கு

இதெல்லாம் சும்மா.











கருத்துகள்

ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
மூன்று படங்களும் மிக அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!
திவாண்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
பட அஞ்சல் அட்டை மாதிரி இருக்கு! பிரமாதம்!
pmt இவ்வாறு கூறியுள்ளார்…
திவா இரண்டாம் படத்தை முழுவதுமாக காட்டி இருந்தால் நன்றாக இருக்கும் அதையே பொடிக்கு சமர்பிக்கலாம்னு நினைக்கிறேன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Pmt.
Thamiz Priyan இவ்வாறு கூறியுள்ளார்…
சரியான ஒளி அளவுகளோடு மூன்றும் அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள்!
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
ராமலக்ஷ்மி,
நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்.

திவா,
நன்றி. நியூயார்க் நகர கட்டிடங்கள் நிறைய இருக்கு. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கட்டும் என்றே ஒரு அழகான கலங்கரை விளக்கை பிடித்தேன்.

pmt,
நானும் இரண்டாவது முழுதாய் இருந்தால் அனுப்பி இருப்பேன். இதையொட்டிய 3-4 படங்கள் அனைத்தையுமே crop பண்ணவேண்டியதாய் போய்விட்டது.
முதல் படம் உங்களுக்கு பிடிக்கலையோ?
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி,
தமிழ்பிரியன்.

சத்தியா
சிவா இவ்வாறு கூறியுள்ளார்…
இதெல்லாம் ச்ச்சும்மா ஜுஜபி...

இந்த சும்மாவே கண்ண கட்டுதே...
ஐயா சத்தியா.. படத்த மொதல்லே போட்டா எங்கள மாதரி கத்துக்குட்டிங்க ல்லாம் கொஞ்சம் சைடு வாங்கிக்குவோமில்ல. powershot powerful shot.

சூப்பர் அப்பு...

வாசி
நாதஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
படங்கள் நல்லா இருக்கு :)
வாழ்த்துக்கள் !!!
மொத படத்துல காட்சி அமைப்பு கொஞ்சம் மாத்துன இன்னும் ரொம்ப நல்லா இருக்கும் :)
இரண்டாவது படம் அரோரா கோவில்ல எடுத்ததா ? அந்த கோவில் படத்தை தான் நான் போட்டிக்கு அனுப்பி இருக்கேன்.
சரண் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல வெளிச்சத்தில் அழகாகவும் தெளிவாகவும் எடுக்கப் பட்டப் படம். இன்னும் கொஞ்சம் இடது பக்கம் சென்று எடுத்திருந்தால் சரிசமமான composition கிடைத்திருக்குமோ?
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வாசி,

நன்றி.
\\எங்கள மாதரி கத்துக்குட்டிங்க ல்லாம் கொஞ்சம் சைடு வாங்கிக்குவோமில்ல\\

நீங்க கத்துக்குட்டி? ம்... நேரம்.

கேமரா பத்தி பாதி விவரம் கூட எனக்குத்தெரியாது. சரி நம்ம அப்புறம் வச்சுக்கலாம் இத.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
அமைப்பு கொஞ்சம் மாத்துன இன்னும் ரொம்ப நல்லா இருக்கும் :)

இந்த படத்துக்கே மெனக்கெட வேண்டியதா போச்சு. வலது பக்கம் நெருக்கமா ஒரு எலக்கட்ரிகல் டவர் இடது பக்கம் இடைஞ்சலா ஒரு கொடின்னு. கிராப்பிங்க்ல இன்னும் கொஞ்சம் சரி பண்ணி இருக்கலாமோ?

\\இரண்டாவது படம் அரோரா கோவில்ல எடுத்ததா ? அந்த கோவில் படத்தை தான் நான் போட்டிக்கு அனுப்பி இருக்கேன்.\\

இல்லைங்க இது பாஸ்டன்(framingham) லஷ்மி கோயில்
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
சூர்யா நன்றி.
நாதஸ்க்கு விளக்கம் சொல்லி இருக்கேன் பாருங்க.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும